கோவை குருடம்பாளையத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலைக்கான பூமி பூஜை!

குருடம்பாளையம் ஊராட்சியில் எல்.ஆர்.ஜி நகர் பகுதியில் ரூ.9 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் 300 மீட்டர் தார் சாலை, மாருதி நகர் பகுதியில் ரூ.11.75 லட்சம் மதிப்பில் தார் சாலை மற்றும் கழிவுநீர் பாதைகளை அமைப்பதற்கான பூமி பூஜையில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சியில் சுமார் 20 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட எல்.ஆர்.ஜி நகர் பகுதியில் பிரதான சாலையில் இருந்து 300 மீட்டர் வரை ரூ.9 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கவும், அதேபோல, மாருதி நகர் பகுதியில் ரூ.11.75 லட்சம் மதிப்பில் தார் சாலை மற்றும் கழிவுநீர் பாதைகளை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக்கொண்டு பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கோவனூர் துரைசாமி, கே.வி.என்.ஜெயராமன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆனந்தன், பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் நர்மதா, துணைத்தலைவர் பூக்கடை ரவி, ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், அசோகபுரம் ஊராட்சித்தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் ஆடிட்டர் சண்முகசுந்தரம், கவுன்சிலர் பார்த்திபன், டியூகாஸ் துணைத்தலைவர் செல்வராஜ், அதிமுக அவைத்தலைவர் வேலுச்சாமி, கவுன்சிலர் சிவகுமார், பிரிக்கால் ரவி, தொப்பம்பட்டி தாமோதரன், விஜயகுமார், சதாநந்தன், வீரபாண்டி பேரூராட்சி செயலாளர் ராமதாஸ், காண்ட்ராக்டர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...