கோவை குருடம்பாளையத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலைக்கான பூமி பூஜை!

குருடம்பாளையம் ஊராட்சியில் எல்.ஆர்.ஜி நகர் பகுதியில் ரூ.9 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் 300 மீட்டர் தார் சாலை, மாருதி நகர் பகுதியில் ரூ.11.75 லட்சம் மதிப்பில் தார் சாலை மற்றும் கழிவுநீர் பாதைகளை அமைப்பதற்கான பூமி பூஜையில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சியில் சுமார் 20 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட எல்.ஆர்.ஜி நகர் பகுதியில் பிரதான சாலையில் இருந்து 300 மீட்டர் வரை ரூ.9 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கவும், அதேபோல, மாருதி நகர் பகுதியில் ரூ.11.75 லட்சம் மதிப்பில் தார் சாலை மற்றும் கழிவுநீர் பாதைகளை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக்கொண்டு பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கோவனூர் துரைசாமி, கே.வி.என்.ஜெயராமன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆனந்தன், பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் நர்மதா, துணைத்தலைவர் பூக்கடை ரவி, ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், அசோகபுரம் ஊராட்சித்தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் ஆடிட்டர் சண்முகசுந்தரம், கவுன்சிலர் பார்த்திபன், டியூகாஸ் துணைத்தலைவர் செல்வராஜ், அதிமுக அவைத்தலைவர் வேலுச்சாமி, கவுன்சிலர் சிவகுமார், பிரிக்கால் ரவி, தொப்பம்பட்டி தாமோதரன், விஜயகுமார், சதாநந்தன், வீரபாண்டி பேரூராட்சி செயலாளர் ராமதாஸ், காண்ட்ராக்டர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...