உடுமலையில் சாலைகளில் மக்காளச் சோளத்தை காய வைக்கும் விவசாயிகள்!

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை உலர வைக்க போதுமான உலர் களங்கள் இல்லாததால், சாலைகளில் உலர வைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள், போதுமான உலர்களங்களை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போதுமான உலர் களங்கள் இல்லாததால், விவசாயிகள் அறுவடை செய்த மக்காசோளத்தை சாலைகளில் காய வைத்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம்உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள், பருவமழையை ஆதாரமாகக் கொண்டு பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.



நீர் இருப்பு மற்றும் நீர்வரத்திற்கு ஏற்றவாறு நீண்ட, மத்திய, குறுகியகால பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்காச்சோளம் சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை காயவைப்பதற்கு உலர் களங்கள் இல்லை என கூறப்படுகிறது.



இதனால், பணிகள் நிறைவடையாத நிலையில் உள்ள பொள்ளாச்சி, திண்டுக்கல் வரை செல்லும் நான்கு வழி சாலையில், உலர்த்தி வருகின்றனர்.



இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு உள்ள நீர் இருப்பு மற்றும் நீர்வரத்திற்கு ஏற்றவாறு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் தற்போது அறுவடைக்கு தயாராகி விட்டது. அதை அறுவடை செய்து காயவைப்பதற்கு உலர்கள வசதி இல்லை. இதனால் உடுமலை அருகே அமைக்கப்பட்டு வருகின்ற நான்கு வழிச்சாலையில் மக்காச்சோளத்தை காய வைத்து வருகின்றோம்.

இதில் போக்குவரத்து தொடங்கப்படாதது எங்களுக்கு சாதகமாக உள்ளது. இல்லையென்றால் தார்ப்பாய்களை வாடகைக்கு எடுத்து வயல்வெளியில் காய வைக்க வேண்டும். இதற்காக சில ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டி வரும்.

ஏற்கனவே இடுபொருட்கள் பராமரிப்பு செலவு அதிகரிப்பு, ஆள்கூலி உயர்ந்துள்ள நிலையில் அறுவடைக்கு பின்னர் செலவுகளால் வருமானத்தில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே மக்காச்சோளம் உள்ளிட்ட தானிய வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை காய வைப்பதற்கு உலர்கள வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்.

மேலும் தற்பொழுது குவிண்டாலுக்கு ரூ.2,500 வரை விலை நிர்ணயம் செய்யப்படுவது போதுமானதாக இல்லை ஆகையால் ஆதார விலையாக3000 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 50,000 செலவு செய்து இருக்கும் நிலையில் 10 ஆயிரம் லாபம் கூட கிடைப்பது இல்லை.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...