புறநானூற்றுப் பாடல்களை பாடி சாதனை - 4 வயது சிறுவனுக்கு குவியும் பாராட்டு!

உடுமலை அடுத்த சேரன் நகரை சேர்ந்த 4 வயது சிறுவன் விதுஷன், புறநானூற்றில், வீரத்தாய் குறித்த 63 பாடல் வரிகளை 2 நிமிடம் 33 வினாடிகளில் ஒப்புவித்து, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புறநானூற்று பாடலை ஒப்புவித்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு திறமைகள் உள்ளது. அவற்றை வெளிக் கொண்டு வரும் போது தான், அவை சாதனைகளாக வெளிப்படுகிறது. மேலும் சாதனை புரிவதற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை உடுமலையை சேர்ந்த சிறுவன் ஒருவர் நிகழ்த்தி காட்டியுள்ளார்.

உடுமலை அடுத்த சேரன் நகரைச் சேர்ந்தவர்கள் ஜான்பால் மற்றும் கௌதமி தம்பதி. ஆசிரியர்களாக பணியாற்றி வரும் இவர்களுக்கு விதுஷன் என்ற 4 வயது மகன் உள்ளார். இவர், பள்ளிக்கு கூட செல்லாத நிலையில், மழலை பருவம் மாறாத மொழியில், புறநானூற்று பாடலை பாடி அசத்தி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

சிறுவன் விதுஷன், புறநானூற்றில் வீரத்தாய் குறித்த 63 பாடல் வரிகளை 2 நிமிடம் 33 வினாடிகளில் ஒப்புவித்து, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு பெற்றோர், உறவினர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...