புறநானூற்றுப் பாடல்களை பாடி சாதனை - 4 வயது சிறுவனுக்கு குவியும் பாராட்டு!

உடுமலை அடுத்த சேரன் நகரை சேர்ந்த 4 வயது சிறுவன் விதுஷன், புறநானூற்றில், வீரத்தாய் குறித்த 63 பாடல் வரிகளை 2 நிமிடம் 33 வினாடிகளில் ஒப்புவித்து, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புறநானூற்று பாடலை ஒப்புவித்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு திறமைகள் உள்ளது. அவற்றை வெளிக் கொண்டு வரும் போது தான், அவை சாதனைகளாக வெளிப்படுகிறது. மேலும் சாதனை புரிவதற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை உடுமலையை சேர்ந்த சிறுவன் ஒருவர் நிகழ்த்தி காட்டியுள்ளார்.

உடுமலை அடுத்த சேரன் நகரைச் சேர்ந்தவர்கள் ஜான்பால் மற்றும் கௌதமி தம்பதி. ஆசிரியர்களாக பணியாற்றி வரும் இவர்களுக்கு விதுஷன் என்ற 4 வயது மகன் உள்ளார். இவர், பள்ளிக்கு கூட செல்லாத நிலையில், மழலை பருவம் மாறாத மொழியில், புறநானூற்று பாடலை பாடி அசத்தி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

சிறுவன் விதுஷன், புறநானூற்றில் வீரத்தாய் குறித்த 63 பாடல் வரிகளை 2 நிமிடம் 33 வினாடிகளில் ஒப்புவித்து, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு பெற்றோர், உறவினர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...