புறநானூற்றுப் பாடல்களை பாடி சாதனை - 4 வயது சிறுவனுக்கு குவியும் பாராட்டு!

உடுமலை அடுத்த சேரன் நகரை சேர்ந்த 4 வயது சிறுவன் விதுஷன், புறநானூற்றில், வீரத்தாய் குறித்த 63 பாடல் வரிகளை 2 நிமிடம் 33 வினாடிகளில் ஒப்புவித்து, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புறநானூற்று பாடலை ஒப்புவித்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு திறமைகள் உள்ளது. அவற்றை வெளிக் கொண்டு வரும் போது தான், அவை சாதனைகளாக வெளிப்படுகிறது. மேலும் சாதனை புரிவதற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை உடுமலையை சேர்ந்த சிறுவன் ஒருவர் நிகழ்த்தி காட்டியுள்ளார்.

உடுமலை அடுத்த சேரன் நகரைச் சேர்ந்தவர்கள் ஜான்பால் மற்றும் கௌதமி தம்பதி. ஆசிரியர்களாக பணியாற்றி வரும் இவர்களுக்கு விதுஷன் என்ற 4 வயது மகன் உள்ளார். இவர், பள்ளிக்கு கூட செல்லாத நிலையில், மழலை பருவம் மாறாத மொழியில், புறநானூற்று பாடலை பாடி அசத்தி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

சிறுவன் விதுஷன், புறநானூற்றில் வீரத்தாய் குறித்த 63 பாடல் வரிகளை 2 நிமிடம் 33 வினாடிகளில் ஒப்புவித்து, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு பெற்றோர், உறவினர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...