ரேட்டிங் என்ற பெயரில் சீட்டிங் - இளைஞரிடம் சைபர் கிரிமினல்கள் நூதன மோசடி

பிரபல வணிக தளத்தில் பொருட்களுக்கு ரேட்டிங் தரும் பணியில் ஈடுபட்டால் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி 28 ஆயிரம் வரையில் முதலீடு செய்து கோவை சரவணம்பட்டியை சேர்ந்த சத்யநாதன் என்பவர் ஏமாந்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் இளைஞர் சத்யநாதன். இவர் வாட்ஸ் அப்பிற்கு ஒரு குறுந்தகவல் வந்திருக்கிறது. அதில் ஆன்லைன் முதலீடு குறித்த விளக்கம் தரப்பட்டிருக்கின்றது. பிரபல வணிக தளத்தில் பொருட்களுக்கு ரேட்டிங் தரும் பணியில் ஈடுபட்டால் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை நம்பி வாட்ஸ் அப்பில் வந்த லிங்கை கிளிக் செய்த அந்த நபர், அவர்கள் கேட்ட விவரங்களை பூர்த்தி செய்து இருக்கிறார். டாஸ்க் தரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 2000 ரூபாய் முதலீடு செய்து 2900 ரூபாயை பெற்றிருக்கின்றார். லாபம் அதிகம் கிடைப்பதாக நினைத்து அடுத்தடுத்த பாஸ்டில் ஈடுபட நினைத்த சத்தியநாதன் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை இகாமர்ஸ் வலைதளத்தில் முதலீடு செய்திருக்கின்றார்.

ஒரே மாதத்தில் சத்தியநாதன் ஏழு தவணையாக இந்த தொகையை ஆன்லைனில் செலுத்தி இருக்கின்றார். இந்த நிலையில் முதலீடு செய்த பணத்தை, டாஸ்கை முடித்துவிட்டு எடுக்கலாம் என நினைத்தபொழுது பணத்தை எடுக்க முடியவில்லை. அப்போதே சத்தியநாதன் சைபர் குற்றவாளிகளால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கின்றார். உடனடியாக சைபர் காவல் நிலையத்தில் பணத்தை பறிகொடுத்த அவர் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சிட்டி சைபர் கிரைம் போலீசார், வங்கி கணக்குகள் விவரங்களை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சீட்டிங், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரிவின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...