தாராபுரத்தில் போலீசாருக்கு தொப்பி வழங்கிய டிஎஸ்பி தனராசு!

தாராபுரத்தில் போக்குவரத்து போலீசார் சார்பில் போக்குவரத்து போலீசாருக்கு வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில், சோலார் மூலம் தலைக்கு குளுமை தரக்கூடிய வட்ட வடிவமான தொப்பியை டிஎஸ்பி தனராசு வழங்கினார்.



திருப்பூர்: தாராபுரத்தில் போக்குவரத்து போலீசாருக்கு டிஎஸ்பி தனராசு தொப்பிகளை வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பேருந்து நிலையம், பொள்ளாச்சி சாலை, அலங்கியம் மற்றும் உடுமலை ரவுண்டானா உள்ளிட்ட பகுதியில் இரவும் பகலும் பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தலையில் அரசு முத்திரை பதித்த தொப்பியைப் பயன்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் அக்னி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அவ்வாறு போலீசார் அணிந்துள்ள தொப்பி சூடேறி போலீசார் பாதுகாப்பு பணியின் போது மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.



இந்நிலையில் போக்குவரத்து போலீசாரின் நிலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தாராபுரம் போக்குவரத்து போலீசாருக்கு வெயிலை, பாதுகாக்கும் சோலாரை உறிஞ்சி தலைக்கு குளுமை தரக்கூடிய வட்ட வடிவமான தொப்பியை தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு போலீசாருக்கு வழங்கி நீர்மோர் கொடுத்தார்.

அப்போது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் மற்றும் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...