தாராபுரத்தில் போலீசாருக்கு தொப்பி வழங்கிய டிஎஸ்பி தனராசு!

தாராபுரத்தில் போக்குவரத்து போலீசார் சார்பில் போக்குவரத்து போலீசாருக்கு வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில், சோலார் மூலம் தலைக்கு குளுமை தரக்கூடிய வட்ட வடிவமான தொப்பியை டிஎஸ்பி தனராசு வழங்கினார்.



திருப்பூர்: தாராபுரத்தில் போக்குவரத்து போலீசாருக்கு டிஎஸ்பி தனராசு தொப்பிகளை வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பேருந்து நிலையம், பொள்ளாச்சி சாலை, அலங்கியம் மற்றும் உடுமலை ரவுண்டானா உள்ளிட்ட பகுதியில் இரவும் பகலும் பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தலையில் அரசு முத்திரை பதித்த தொப்பியைப் பயன்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் அக்னி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அவ்வாறு போலீசார் அணிந்துள்ள தொப்பி சூடேறி போலீசார் பாதுகாப்பு பணியின் போது மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.



இந்நிலையில் போக்குவரத்து போலீசாரின் நிலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தாராபுரம் போக்குவரத்து போலீசாருக்கு வெயிலை, பாதுகாக்கும் சோலாரை உறிஞ்சி தலைக்கு குளுமை தரக்கூடிய வட்ட வடிவமான தொப்பியை தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு போலீசாருக்கு வழங்கி நீர்மோர் கொடுத்தார்.

அப்போது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் மற்றும் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...