உடுமலையில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இட ஆக்கிரமிப்புகளை அகற்ற வலுக்கும் கோரிக்கை!

உடுமலை நகராட்சியில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ஏற்கனவே உள்ள பூங்காக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உடுமலை நகராட்சிக்குட்பட்ட 33வது வார்டில் 300க்கும் மேற்பட்ட லே அவுட்கள் உள்ளன. இதில் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் இடம் ஆக்கிரமிப்பால் மாயமானது குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் 61 மனைப் பிரிவுகளில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்டு வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. இந்த இடங்களை நீக்கும் வகையில் முதற்கட்டமாக நகராட்சி சார்பில் பூங்கா இடங்களில் தகவல் பலகை வைக்கப்பட்டன.

அதில் அவ்விடத்துக்கான வரைபடம் பரப்பளவு உள்ளிட்ட தகவல்கள் எழுதப்பட்டிருந்தன. மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து இடங்களிலும் பூங்கா அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சியில் திர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் போதுமான நடவடிக்கை எடுக்கப்படாமல் பூங்கா இடங்களில் மீண்டும் ஆக்கரிமிப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு குடியிருப்புகளில் பூங்காவுக்கான இடங்களை முழுமையாக மீட்பது கேள்விக்குறியாக உள்ளது.



அதே வேளையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட பூங்காக்களின் நிலையும் தொடர் பராமரிப்பு இல்லாமல் பரிதாப நிலைக்கு மாறியுள்ளது.



எஸ்.என்.ஆர். லேஅவுட், ஸ்ரீநகர், அனுஷம் நகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சிறுவர் பூங்காவில் குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.



சில இடங்களில் பூங்காவின் கம்பி வேலி சிதைக்கப்பட்டு குடிமகன்களுக்கு மட்டுமே பயன்படும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் அனைத்து குடியிருப்புகளிலும் பொழுதுபோக்கு இடம் இல்லாமல் மக்கள் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார்.

ஆகையால் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பூங்கா இடங்கள் ஆக்கிரமிப்பை பாரபட்சம் இல்லாமல் அகற்ற வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்ட பூங்காவில் சேதம் அடைந்துள்ள உபகரங்கள் மற்றும் இதர கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் பல கோடி ரூபாய் மதிப்பில் உள்ள பூங்கா இடங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் கைவசம் முழுமையாக சென்று விடும் என உடுமலை பகுதி சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...