உலக கண் அழுத்த நோய் வாரம்: கோவையில் வாகன ஓட்டிகளிடையே மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு!

உலக கண் அழுத்த நோய் வாரத்தையொட்டி, கிளக்கோமா மற்றும் அதற்கான சிகிச்சை குறித்து கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் இடையே மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை: கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு மாணவ, மாணவிகள் கண் அழுத்த நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



கண்ணில் அதிகரிக்கும் அழுத்தத்தின் காரணமாக பார்வைத்திறன் படிப்படியாக குறைந்து பார்வையை இழக்கும் அபாயம் கொண்டது தான் கிளாக்கோமா என்ற நோய். இந்த கண் அழுத்த நோய்க்கு துவக்க நிலையிலேயே உரிய சிகிச்சையை பெற வேண்டியது அவசியமாகும்.

இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் உலக கண் அழுத்த நோய் வாரம் மார்ச் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



இதனை முன்னிட்டு, கோவையில் கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



சரவணம்பட்டி சோதனை சாவடி முன்பாக உள்ள பிரதான சாலையில் இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் கண் அழுத்த நோய் வராமல் தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...