கோவையில் இரவு ரோந்து பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு!

கோவையில் இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றம் நடக்காமல் தடுத்து குற்றவாளியை துரத்தி பிடித்து கைது செய்த காவலர்கள், சின்ராஜ் மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.


கோவை: கோவையில் இரவு நேர ரோந்து பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்கள் இருவரை மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் நேரில் அழைத்து பாராட்டினார்.

மேட்டுப்பாளையம் உட்கோட்டம் காரமடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவலர்கள் சின்ராஜ் (PC 815) மற்றும் சீனிவாசன் (PC 930) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக 2 நபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், அந்த நபர்கள் காவலர்களை பார்த்தவுடன் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு சம்பவ இடத்தை தப்பிச்செல்ல முயன்றனர். இதனையடுத்து அவர்களை காவலர்கள் இருவரும் துரத்தி சென்ற நிலையில், ஒருவரை பிடித்தனர். தொடர்ந்து அவர்களது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் கத்தி, பெரிய இரும்பு கம்பி உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்டவர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் (30) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவுநேர ரோந்து பணியில் குற்றம் ஏதும் நடவாமல் தடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி பத்ரிநாராயணன் நேரில் அழைத்து பாராட்டினார்.



மேலும் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...