கோவையில் இரவு ரோந்து பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு!

கோவையில் இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றம் நடக்காமல் தடுத்து குற்றவாளியை துரத்தி பிடித்து கைது செய்த காவலர்கள், சின்ராஜ் மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.


கோவை: கோவையில் இரவு நேர ரோந்து பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்கள் இருவரை மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் நேரில் அழைத்து பாராட்டினார்.

மேட்டுப்பாளையம் உட்கோட்டம் காரமடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவலர்கள் சின்ராஜ் (PC 815) மற்றும் சீனிவாசன் (PC 930) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக 2 நபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், அந்த நபர்கள் காவலர்களை பார்த்தவுடன் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு சம்பவ இடத்தை தப்பிச்செல்ல முயன்றனர். இதனையடுத்து அவர்களை காவலர்கள் இருவரும் துரத்தி சென்ற நிலையில், ஒருவரை பிடித்தனர். தொடர்ந்து அவர்களது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் கத்தி, பெரிய இரும்பு கம்பி உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்டவர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் (30) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவுநேர ரோந்து பணியில் குற்றம் ஏதும் நடவாமல் தடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி பத்ரிநாராயணன் நேரில் அழைத்து பாராட்டினார்.



மேலும் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...