கோவையில் இரவு ரோந்து பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு!

கோவையில் இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றம் நடக்காமல் தடுத்து குற்றவாளியை துரத்தி பிடித்து கைது செய்த காவலர்கள், சின்ராஜ் மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.


கோவை: கோவையில் இரவு நேர ரோந்து பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்கள் இருவரை மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் நேரில் அழைத்து பாராட்டினார்.

மேட்டுப்பாளையம் உட்கோட்டம் காரமடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவலர்கள் சின்ராஜ் (PC 815) மற்றும் சீனிவாசன் (PC 930) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக 2 நபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், அந்த நபர்கள் காவலர்களை பார்த்தவுடன் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு சம்பவ இடத்தை தப்பிச்செல்ல முயன்றனர். இதனையடுத்து அவர்களை காவலர்கள் இருவரும் துரத்தி சென்ற நிலையில், ஒருவரை பிடித்தனர். தொடர்ந்து அவர்களது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் கத்தி, பெரிய இரும்பு கம்பி உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்டவர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் (30) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவுநேர ரோந்து பணியில் குற்றம் ஏதும் நடவாமல் தடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி பத்ரிநாராயணன் நேரில் அழைத்து பாராட்டினார்.



மேலும் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...