தாராபுரம் ஆற்றல் அறக்கட்டளை நிறுவனருக்கு ஆன்மீக செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களை சீரமைத்தல் உள்ளிட்ட ஆன்மீக பணிகளை மேற்கொண்டு வந்த ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் அசோக்குமாருக்கு 2023ஆம் ஆண்டுக்கான ஆன்மீக செம்மல் விருதை மதுரை ஆதினம் வழங்கி கௌரவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் அசோக்குமாருக்கு ஆன்மீக செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஆற்றல் அறக்கட்டளை பல்வேறு ஆன்மீகப் பணிகளை செய்து வருகிறது இதனயொட்டி ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் அசோக் குமார், புதிய கோவில்களை கட்டி கொடுப்பது, பழைய கோவில்களை புதுப்பித்து கொடுப்பது, அரசு பள்ளி கழிவறை கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், பராமரிப்பின்றி இருக்கும் கட்டிடங்களை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஆற்றல் அறக்கட்டளை பொதுமக்களின் ஒத்துழைப்போடு நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களை புனரமைத்து வருகிறது. இச்சேவையை பாராட்டி ஆற்றல் அரக்கட்டளை நிறுவனர் அசோக்குமாருக்கு ஆன்மீக செம்மல் விருதை மதுரை ஆதீனம் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சூரியனார் கோவில் சிவ கிரக யோகிகள் ஆதீனம் 28வது குரு மகா சன்னிதானம், மகாலிங்க தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள், வேளாண் குறிச்சி ஆதீனம் சக்தியான மகா தேவ தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...