தாராபுரம் ஆற்றல் அறக்கட்டளை நிறுவனருக்கு ஆன்மீக செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களை சீரமைத்தல் உள்ளிட்ட ஆன்மீக பணிகளை மேற்கொண்டு வந்த ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் அசோக்குமாருக்கு 2023ஆம் ஆண்டுக்கான ஆன்மீக செம்மல் விருதை மதுரை ஆதினம் வழங்கி கௌரவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் அசோக்குமாருக்கு ஆன்மீக செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஆற்றல் அறக்கட்டளை பல்வேறு ஆன்மீகப் பணிகளை செய்து வருகிறது இதனயொட்டி ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் அசோக் குமார், புதிய கோவில்களை கட்டி கொடுப்பது, பழைய கோவில்களை புதுப்பித்து கொடுப்பது, அரசு பள்ளி கழிவறை கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், பராமரிப்பின்றி இருக்கும் கட்டிடங்களை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஆற்றல் அறக்கட்டளை பொதுமக்களின் ஒத்துழைப்போடு நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களை புனரமைத்து வருகிறது. இச்சேவையை பாராட்டி ஆற்றல் அரக்கட்டளை நிறுவனர் அசோக்குமாருக்கு ஆன்மீக செம்மல் விருதை மதுரை ஆதீனம் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சூரியனார் கோவில் சிவ கிரக யோகிகள் ஆதீனம் 28வது குரு மகா சன்னிதானம், மகாலிங்க தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள், வேளாண் குறிச்சி ஆதீனம் சக்தியான மகா தேவ தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...