தாராபுரம் ஆற்றல் அறக்கட்டளை நிறுவனருக்கு ஆன்மீக செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களை சீரமைத்தல் உள்ளிட்ட ஆன்மீக பணிகளை மேற்கொண்டு வந்த ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் அசோக்குமாருக்கு 2023ஆம் ஆண்டுக்கான ஆன்மீக செம்மல் விருதை மதுரை ஆதினம் வழங்கி கௌரவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் அசோக்குமாருக்கு ஆன்மீக செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஆற்றல் அறக்கட்டளை பல்வேறு ஆன்மீகப் பணிகளை செய்து வருகிறது இதனயொட்டி ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் அசோக் குமார், புதிய கோவில்களை கட்டி கொடுப்பது, பழைய கோவில்களை புதுப்பித்து கொடுப்பது, அரசு பள்ளி கழிவறை கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், பராமரிப்பின்றி இருக்கும் கட்டிடங்களை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஆற்றல் அறக்கட்டளை பொதுமக்களின் ஒத்துழைப்போடு நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களை புனரமைத்து வருகிறது. இச்சேவையை பாராட்டி ஆற்றல் அரக்கட்டளை நிறுவனர் அசோக்குமாருக்கு ஆன்மீக செம்மல் விருதை மதுரை ஆதீனம் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சூரியனார் கோவில் சிவ கிரக யோகிகள் ஆதீனம் 28வது குரு மகா சன்னிதானம், மகாலிங்க தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள், வேளாண் குறிச்சி ஆதீனம் சக்தியான மகா தேவ தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...