கோவையில் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் - பிரபல வங்கிகள் பங்கேற்பு

கோவையில் கல்லூரி மாணவர்களுக்காக நடந்த கல்விக் கடன் முகாமினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடக்கி வைத்தார். ஐஓபி, எச்.டி.எப்.சி, டி.எம்.பி, பேங்க் ஆப் பரோடா, ஆக்ஸிஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஃபெடரல் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் பங்கேற்று மாணவர்களுக்கு கடனுதவி வழங்கின.


கோவை: கோவை மாவட்டத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களில் கல்வி கடன் தேவைப்படும் மாணவர்களுக்காக ஒரு நாள் கல்விக்கடன் முகாம் இன்று நடைபெறுகிறது.

கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றுவரும் இந்த முகாமில் மாவட்ட முன்னோடி வங்கிகள் கடன் உதவிகளை வழங்குவதற்காக பங்கேற்றுள்ளன. இதில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் கல்வி கடன் பெறுவதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு வந்து விண்ணப்பித்து வருகின்றனர்.



முகாமினை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து மாணவர்களுடன் பேசினார். பின்னர், முகாமினையும் ஆட்சியர் பார்வையிட்டார்.



ஐஓபி, எச்.டி.எப்.சி, டி.எம்.பி, பேங்க் ஆப் பரோடா, ஆக்ஸிஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஃபெடரல் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் கடன் உதவிகளை வழங்குகின்றன. இந்த முகாம்கள் மூலம் 350 கோடி வரை கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...