கோவையில் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கருத்தரங்கம்

கோவையில் நவீன இணையவழி பண மோசடி குற்றங்கள், அதன் வகைகள், அதிலிருந்து தற்காத்தும் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் சமூக வலைதளத்தை கவனமாக கையாளும் வழிமுறைகள், Cryptocurrency, Bitcoin தொடர்பான விழிப்புணர்வுகள் குறித்து கருத்தரங்கில் விளக்கப்பட்டன.


கோவை: கோவையில் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கருத்தரங்கம் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், தலைமையில் நடைபெற்றது.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், தலைமையில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) சுகாசினி, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் காவல் ஆய்வாளர் அருண் தலைமையிலான காவல்துறையினர் மூலம் நவீன இணையவெளி குற்றங்கள் மற்றும் எதிர்கால இணைய வழி குற்ற அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பான கருத்தரங்கம் நடத்தப்பட்டது.



இதில், நவீன இணையவழி பண மோசடி குற்றங்கள், அதன் வகைகள், அதிலிருந்து தற்காத்தும் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் சமூக வலைதளத்தை கவனமாக கையாளும் வழிமுறைகளும், Cryptocurrency, Bitcoin தொடர்பான விழிப்புணர்வுகள், பாதுகாப்பான பண பரிமாற்றத்திற்கான வழிமுறைகள் மற்றும் Online பண பரிமாற்றத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.



மேற்படி விழிப்புணர்வு கூட்டத்தில் கோவை மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வங்கி ஊழியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் என மொத்தம் சுமார் 70-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...