ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு - கோவையில் முக்கிய குற்றவாளி கைது!

கோவை சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு வந்த பாபு என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தொடர்புடைய பாபு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி மற்றும் இதர பொருட்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்வதும் மற்றும் மற்ற உபயோகங்களுக்குப் பயன்படுத்தப்படுவதும் முற்றிலுமாக தடுக்கப்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவின் பேரில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி, சேரன் மாநகர் அருகே 1,500 கிலோ ரேஷன் அரிசியை ஆம்னி வேனில் கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதில் பாபு என்பவருக்குத் தொடர்பு இருப்பதும், அரிசி கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரிய வந்தது. இந்நிலையில் குடிமைப் பொருள் வழங்கல் காவல் ஆய்வாளர் மேனகா தலைமையிலான தனிப்படையினர், இன்று பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...