உடுமலையில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரம்!

உடுமலை நகராட்சியில் டெங்கு, மலேரியா, இன்ஃபுளுவென்சா உள்ளிட்ட நோய் பரவலை தடுக்கும் விதமாக, தங்கம்மாள் ஓடை மற்றும் யு.கே.சி நகர் பகுதிகளில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பி.டி. மருந்து 10 லிட்டருக்கு 250 எம்.எல் மருந்து கலந்து ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுக்களை கட்டுப்படுத்த ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

கொசுக்களின் மூலம் பரவும் நோய்களாக டெங்கு காய்ச்சல், மலேரியா, வைரஸ் காய்ச்சல் மற்றும் இன்ஃப்ரின்சா பரவுதலை தடுக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.



நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற தலைவர் அறிவுறுத்தலின்படி இன்று கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதியான தங்கம்மாள் ஓடை மற்றும் யு.கே.சி நகர் பகுதிகளில் கால்வாய்களில் உற்பத்தியாகும் கொசுக்களை கட்டுப்படுத்தும் பி.டி. மருந்து 10 லிட்டருக்கு 250 எம்.எல் மருந்து கலந்து ட்ரோன் எந்திரம் மூலம் தெளிக்கப்பட்டது.



கொசு ஒழிப்பு பணியாளர்கள் செல்ல இயலாத கால்வாய்கள் உள்ள இடங்களில் ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கப்படுகிறது. கொசு ஒழிப்பு பணியில் 58 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். நகரில் 33 வார்டுகளில் சிக்ஸ்டே பிளாக் என்ற முறையில் கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் கொசு ஓழிப்புபணிக்கு செல்ல இயலாத பகுதிகளில் இப்பணி இன்று முதல் அனைத்து கால்வாய்களிலும் மருந்து தெளிக்கப்படும் எனவும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இந்த நிகழ்வில் நகர மன்ற தலைவர் மத்தீன், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...