உடுமலையில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரம்!

உடுமலை நகராட்சியில் டெங்கு, மலேரியா, இன்ஃபுளுவென்சா உள்ளிட்ட நோய் பரவலை தடுக்கும் விதமாக, தங்கம்மாள் ஓடை மற்றும் யு.கே.சி நகர் பகுதிகளில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பி.டி. மருந்து 10 லிட்டருக்கு 250 எம்.எல் மருந்து கலந்து ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுக்களை கட்டுப்படுத்த ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

கொசுக்களின் மூலம் பரவும் நோய்களாக டெங்கு காய்ச்சல், மலேரியா, வைரஸ் காய்ச்சல் மற்றும் இன்ஃப்ரின்சா பரவுதலை தடுக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.



நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற தலைவர் அறிவுறுத்தலின்படி இன்று கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதியான தங்கம்மாள் ஓடை மற்றும் யு.கே.சி நகர் பகுதிகளில் கால்வாய்களில் உற்பத்தியாகும் கொசுக்களை கட்டுப்படுத்தும் பி.டி. மருந்து 10 லிட்டருக்கு 250 எம்.எல் மருந்து கலந்து ட்ரோன் எந்திரம் மூலம் தெளிக்கப்பட்டது.



கொசு ஒழிப்பு பணியாளர்கள் செல்ல இயலாத கால்வாய்கள் உள்ள இடங்களில் ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கப்படுகிறது. கொசு ஒழிப்பு பணியில் 58 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். நகரில் 33 வார்டுகளில் சிக்ஸ்டே பிளாக் என்ற முறையில் கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் கொசு ஓழிப்புபணிக்கு செல்ல இயலாத பகுதிகளில் இப்பணி இன்று முதல் அனைத்து கால்வாய்களிலும் மருந்து தெளிக்கப்படும் எனவும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இந்த நிகழ்வில் நகர மன்ற தலைவர் மத்தீன், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...