கோவையில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணி பிரமுகர் உட்பட 4 பேர் கைது

கோவையில் நேற்று நள்ளிரவில் டவுன்ஹால், மாகாளியம்மன் கோயில் ரோட்டில் நடந்து சென்ற 4 வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சூர்ய பிரகாஷ், பிரகாஷ் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை டவுன்ஹால் பகுதியில் மேற்கு வங்கத்தை பூர்விகமாக கொண்ட கெளதம் தனது நண்பர்களான தன்மாய் ஜானா, ஜாகாத் உள்ளிட்டோருடன் மாகாளியம்மன் கோயில் ரோட்டில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த சில நபர்கள், வழி விடமாட்டியா என சொல்லி வடமாநில தொழிலாளர்களை தாக்கினர்.

இந்த நிலையில் மர்ம நபர்களால் சக தொழிலாளிகள் நள்ளிரவில் அடித்து துன்புறுத்தப்பட்டதை தெரிந்துகொண்ட வட மாநில தொழிலாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கமிஷ்னர் பாலகிருஷ்ணன், வடமாநில தொழிலாளர்களை தாக்கியவர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில், 294 பி, 323, 506 உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்த போலீசார், நள்ளிரவில் சூர்ய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ், வேல்முருகன் நான்கு நபர்களை கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில் பிரகதீஸ், வேல்முருகன் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் கைதான முருகன் என்கிற சூர்ய பிரகாஷ், பிரகாஷ் இந்து முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய விவகாரத்தில் இந்து முன்னணியை சேர்ந்த இருவர் கைதான நிலையில், இந்து முன்னணி அமைப்பினருக்கு சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் கோவை போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...