வெள்ளகோவில் மதுக்கடைக்கு எதிர்ப்பு - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குளிர்சாதன மதுக்கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு மதுபானக்கடை செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 15 மாதங்களுக்கு முன்பு பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து அங்கிருந்த கடை அகற்றப்பட்டது.



இந்நிலையில் தற்போது அதேபகுதியில் நவீன குளிர்சாதன வசதியுடன் மதுக்கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், மதுக்கடை அமையும் இடத்தின் அருகே அரசு துவக்கப்பள்ளி, பேருந்து நிலையம், டிஆர் நகர் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், அந்த இடத்தில் மதுபானக்கடை அமைக்க கூடாது என வெள்ளகோவில் நகராட்சி 5வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில் 50‌க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மதுக்கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளுங்கட்சியின் கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...