வெள்ளகோவில் மதுக்கடைக்கு எதிர்ப்பு - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குளிர்சாதன மதுக்கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு மதுபானக்கடை செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 15 மாதங்களுக்கு முன்பு பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து அங்கிருந்த கடை அகற்றப்பட்டது.



இந்நிலையில் தற்போது அதேபகுதியில் நவீன குளிர்சாதன வசதியுடன் மதுக்கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், மதுக்கடை அமையும் இடத்தின் அருகே அரசு துவக்கப்பள்ளி, பேருந்து நிலையம், டிஆர் நகர் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், அந்த இடத்தில் மதுபானக்கடை அமைக்க கூடாது என வெள்ளகோவில் நகராட்சி 5வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில் 50‌க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மதுக்கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளுங்கட்சியின் கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...