மத்திய சிறை மைதானத்தில் சடலமாக தொங்கிய கர்நாடக இளைஞர் - போலீசார் விசாரணை

கோவை பார்கேட் பகுதியில் உள்ள மத்திய சிறைத் துறைக்கு சொந்தமான மைதானத்தில் உள்ள மரத்தில் கர்நாடக இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை பார்கேட் பகுதியில் உள்ள சிறைத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் அவ்வப்போது அரசு பொருட்காட்சிகள் நடைபெறும். தற்போது காலியாக உள்ள மைதானத்தின் ஒரு பகுதியில் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கியவாறு இளைஞர் சடலம் இருப்பதாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள், ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மரத்தில் தொங்கிய இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் கர்நாடகா மாநிலம் மாண்டியாவை சேர்ந்த சுகேஷ் (வயது25) என்பதும், வேலை தேடி அவர் கோவை வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...