மத்திய சிறை மைதானத்தில் சடலமாக தொங்கிய கர்நாடக இளைஞர் - போலீசார் விசாரணை

கோவை பார்கேட் பகுதியில் உள்ள மத்திய சிறைத் துறைக்கு சொந்தமான மைதானத்தில் உள்ள மரத்தில் கர்நாடக இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை பார்கேட் பகுதியில் உள்ள சிறைத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் அவ்வப்போது அரசு பொருட்காட்சிகள் நடைபெறும். தற்போது காலியாக உள்ள மைதானத்தின் ஒரு பகுதியில் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கியவாறு இளைஞர் சடலம் இருப்பதாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள், ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மரத்தில் தொங்கிய இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் கர்நாடகா மாநிலம் மாண்டியாவை சேர்ந்த சுகேஷ் (வயது25) என்பதும், வேலை தேடி அவர் கோவை வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...