கோவையில் போதை மாத்திரை விற்பனை - இளைஞரை கைது

கோவை போத்தனூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட வெள்ளலூர் மகாலிங்கபுரத்தை சேர்ந்த சசிதரன் எனும் இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 அட்டைகளில் 88 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை போத்தனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று மாலை அங்குள்ள கோணவாய்க்கால் பாளையம் டாஸ்மாக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 10 அட்டைகளில் 88 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், அவர் வெள்ளலூர் மகாலிங்கபுரம், ராமசாமி நகரை சேர்ந்த பூபாலன் மகன் சசிதரன் (வயது 22) என்பது தெரியவந்தது. இவர் பிளம்பர் வேலை செய்து வருவதும், குடும்பத்தாரிடம் குடித்துவிட்டு தொடர்ந்து சண்டையிட்டு பிரச்சனை செய்வதையும் அவர் வாடிக்கையாக செய்துவருவதும் தெரியவந்தது.

இந்த நிலையில் போதை மாத்திரை விற்றதற்காக கைது செய்யப்பட்ட சசிதரன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...