கோவையில் போதை மாத்திரை விற்பனை - இளைஞரை கைது

கோவை போத்தனூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட வெள்ளலூர் மகாலிங்கபுரத்தை சேர்ந்த சசிதரன் எனும் இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 அட்டைகளில் 88 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை போத்தனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று மாலை அங்குள்ள கோணவாய்க்கால் பாளையம் டாஸ்மாக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 10 அட்டைகளில் 88 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், அவர் வெள்ளலூர் மகாலிங்கபுரம், ராமசாமி நகரை சேர்ந்த பூபாலன் மகன் சசிதரன் (வயது 22) என்பது தெரியவந்தது. இவர் பிளம்பர் வேலை செய்து வருவதும், குடும்பத்தாரிடம் குடித்துவிட்டு தொடர்ந்து சண்டையிட்டு பிரச்சனை செய்வதையும் அவர் வாடிக்கையாக செய்துவருவதும் தெரியவந்தது.

இந்த நிலையில் போதை மாத்திரை விற்றதற்காக கைது செய்யப்பட்ட சசிதரன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...