கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பேரூர் குளக்கரையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடல்

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், பேரூர் பெரியகுளத்தில் ஆறாண்டுகளுக்கு முன்பு துவங்கிய முதல் வார களப்பணியின் வெற்றியைத் தொடர்ந்து இன்று மூன்றாவது கட்டமாக 2ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், பேரூர் பெரியகுளத்தில், மூன்றாவது கட்டமாக 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.



கோவை பேரூர் பெரியகுளத்தில் ஆறாண்டுகளுக்கு முன்பு துவங்கிய முதல் வார களப்பணி, அக்குளத்தைத் தூர்வாரி பின்பு செங்குளம் வெள்ளலூர் குளம் தூர்வாருதல், 10 குட்டைகளைத் தூர்வாரி நீர் கொண்டுவந்து சேர்க்கும் பணி, மியாவாக்கி குறுங்காடுகளை உருவாக்குதல், வாய்க்காலைத் தூர்வாரி கண்காணித்தல், குளக்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுதல், அணைக்கட்டுகளில் களப்பணி செய்தல், கல்லூரி, பள்ளி மாணவ மாணவியர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், போன்ற நீர் நிலைகளுக்கான தன்னார்வப் பணி தற்போது 278 வாரங்களை எட்டியுள்ளது.



நமது நகரின் பசுமை பரப்பளவை அதிகரிப்பது தற்போதைய காலத்தில் அவசியமாக இருக்கிறது.



அதனைக் கருத்தில் கொண்டு நீர்நிலைகளின் கரைகளில், நகரின் பல்வேறு பகுதிகளில் மாயாவாக்கி முறையில் அடர் வனங்களை உருவாக்கி வருகிறோம்.



நகரின் பிரதானமான நீர் நிலையாக உள்ள பேரூர் பெரிய குளத்தின் கரையில் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 3,500 மரங்களைக் கொண்ட குறுங்காட்டை உருவாக்கியுள்ளோம்.



தற்போது மூன்றாவது கட்டமாக 2000 மரக்கன்றுகளை நடும் பணி இன்று (ஞாயிறு) காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. இந்த பணிக்காக நிதி உதவி ZF Windpower, Coimbatore pvt Ltd நிறுவனம் வழங்கியுள்ளது.



இந்த நிகழ்வில் திரளான பொதுமக்களும், தன்னார்வலர்களும், கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி, ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

















Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...