மூலனூர் ஒன்றியத்தில் ரூ.4.51 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4 கோடியே 51 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



திருப்பூர்: மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4 கோடியே 51 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4 கோடியே 51 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



கன்னிவாடி பேரூராட்சி வார்டு எண்.9ல் ஒரு கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் வாராந்திர ஆட்டுச்சந்தை மேம்படுத்தும் பணிகளும், ரூ.73.50 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளகோவில் ரோடு-வேளாண்துறை ரோடு பழுதடைந்த தார்ச்சாலையைப் பலப்படுத்துதல் பணிகளையும், மூலனூர் பேரூராட்சி ஏசு வீதியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும், மூலனூர் பேரூராட்சி சோமகோட்டை பிரிவில் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் கரூர்-தாராபுரம் சாலை முதல் ஊரநாயக்கன்வலசு புதிய பழைய காலனி வரை தார்ச்சாலை பணிகளையும்,

கொளத்துப்பாளையம் பேரூராட்சி டி.காளி பாளையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கரூர் சாலை முதல் துளிப்கிளாத்திங் மில் மண்சாலையை தார்ச்சாலையாக அமைக்கும் பணிகளையும், மீனாட்சி நகர் பூங்காவில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட புதிய அபிவிருத்தி பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கும் உரலகம் அமைக்கும் பணிகளையும், ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் மறுசுழற்சி பொருட்கள் சேகரிப்பு மையம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் மற்றும் கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.10.50லட்சம் மதிப்பீட்டில் சி.சி.டிவி கேமரா அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்.



இதன் தொடர்ச்சியாக வருவாய்த்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கினர்.



இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பே. சாமிநாதன், திருப்பூர் மாவட்டத்தில் வட மாநிலத்தவர்கள் யாரும் தாக்கப்படவில்லை எனவும், வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு முழுவதும் பரவி வரும் செய்தி பொய்யாகச் சித்தரிக்கப்பட்டது எனவும், மேலும் இது போன்ற சித்தரிப்பு காட்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

மேலும் வட மாநிலத்தவர் யாரும் பயப்படத் தேவையில்லை. திமுக அரசு அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும். நாளை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...