குண்டடம் வாரச்சந்தையில் வரத்து அதிகரிப்பு - ஆடு, கோழிகள் விலை வீழ்ச்சி

குண்டடம் வாரச்சந்தைச் சனிக்கிழமை தோறும் அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரை ஆடு, கோழிகள் விற்பனை நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி இன்று நடைபெற்ற சந்தையில் வரத்து அதிகரிப்பால் ஆடு, கோழிகள் விலை கடும் வீழ்ச்சியடைந்தது.



திருப்பூர்: குண்டடம் வாரச்சந்தையில் வரத்து அதிகரிப்பால் ஆடு, கோழிகள் விலை கடும் வீழ்ச்சியடைந்தது.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் வாரச்சந்தையில் வறட்சியால் ஆடு, கோழிகளின் வரத்து அதிகரித்து, விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

இது குறித்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரி மகேந்திரன் கூறியதாவது, குண்டடம் வாரச்சந்தைச் சனிக்கிழமை தோறும் அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரை ஆடு, கோழிகள் விற்பனை நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி வாரச் சந்தைக்கு குண்டடம், ஊதியூர், கொடுவாய், மேட்டுக்கடை, சூரியநல்லூர், பூளவாடி, பெல்லம்பட்டி, தாராபுரம், பல்லடம், பொங்கலூர், கர்நாடக உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அந்தந்த பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள், கோழிகள் விற்பனைக்காகக் கொண்டு வருகின்றனர்.

இங்கு ஆடுகளை வாங்குவதற்காக மேச்சேரி, கேரளா, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காகவும், இறைச்சிக்காகவும் கொண்டு செல்கின்றனர்.



இந்நிலையில் வெயில் அதிகரிப்பால் மேய்ச்சல் குறைந்ததால் ஆடுகளின் வரத்து அதிகமாக இருந்தது. மேலும் இறைச்சிக் கடைகளில் விற்பனை குறைவாக இருப்பதால் இறைச்சி விற்பனையாளர்கள் ஆடுகளை வாங்குவதில் ஆர்வம் கட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

இதனால் கடந்த வாரங்களில் இறைச்சிக்காக வாங்கப்பட்ட 10கிலோ எடையுள்ள ஒரு ஆடு ரூ.7 ஆயிரத்துக்கு விலை போனது. ஆனால் இந்த வாரம் ரூ.6 ஆயிரத்திற்கு விலைபோனது. ரூ.12 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடுகள், இந்த வாரம் ரூ.9ஆயிரத்து விற்பனையானது.

வீடுகளில் கோழி மற்றும் சேவல்களை வளர்ப்போர் சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த கோழிகளை வாங்க தாராபுரம், காங்கேயம், பல்லடம்,கோவை,பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கறிக்கடைக்காரர்கள் நேரடியாக வந்து வாங்கிச் செல்கின்றனர். கோழியின் எடைக்கு தகுந்தாற்போல விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த வாரம் இறைச்சிக்கு விற்கும் கோழிகள் கடந்த வாரம் 1 கிலோ ரூ.350 முதல் ரூ.450 வரை விலைபோனது. ஆனால் இந்த வாரம் 1 கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விலை போனது என்றார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...