காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை கருத்து - கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!

காரல் மார்க்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கோவை விமான நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு காரணமாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: காரல் மார்க்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் காரல் மார்க்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவு செய்திருந்ததாக கூறி அவர் எங்கு சென்றாலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது. ஆளுநருக்கு எதிராக கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.



இந்நிலையில் கோவை மற்றும் உதகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விமான நிலையம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பத்பநாபன் உட்பட சுமார் 50 பேர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.



பின்னர் போராட்டம் நடத்திய சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.



கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மற்றும் காவல் துறையினருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென சாலையில் அமர்ந்தது காவல்துறை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு சாதகமாக செயல்படுவதாக கூறி முழக்கங்களை எழுப்பினர்.



இதனையடுத்து காவல் துறையினர் சாலையில் அமர்ந்த அனைவரையும் தூக்கி சென்று காவல் துறை வாகனத்தில் ஏற்றினர்.



இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...