இடைத்தேர்தலில் பயந்துபோய் தான் திமுக அமைச்சர்கள் விதிமீறலில் ஈடுபட்டனர் - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை குனியமுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் பேசிய அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பயந்து போய் தான் திமுக அமைச்சர்கள் அனைவரும் களத்தில் இறங்கி விதிமீறல்களில் ஈடுபட்டதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தல் அதிமுக 40 தொகுதியிலும் வெல்லும் எனவும் தெரிவித்தார்.



கோவை: இடைத்தேர்தலில் பயந்து போய் தான் அனைத்து திமுக அமைச்சர்களும் களத்தில் இறங்கி விதிமீறலில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம் குனியமுத்தூர் அதிமுக பகுதி கழக அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் எழுதும் மாணவ மாணவிகளுக்கு இலவச வினா விடை வங்கி புத்தகம் வழங்கப்பட்டது.



இதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது, ஜெயலலிதா எப்படி திட்டங்களை அளித்தார்களோ, அதனைத் தொடர்ந்து எடப்பாடியார் அளித்தார். வருங்காலத்தில் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வந்து மீண்டும் இந்த திட்டங்களை எல்லாம் தொடர்ந்து வழங்குவார்.

திமுக அரசு அம்மா அளித்த பல திட்டங்களை நிறுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தலை பொருத்தவரை, அதிமுகவை கண்டும் எடப்பாடியாரை கண்டும் அனைத்து அமைச்சர்களும் இரவு பகலாக மக்களை பட்டியில் வைத்து அடைப்பது போல் அடைத்து பணத்தையும் தங்க காசுகளையும் கொடுத்தார்கள்.

தேர்தல் நடைபெறுகின்ற நாளில் காலை முதல் மாலை வரை விதிமீறல்கள் நடந்தது. அதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. இவ்வளவு விதிமீறல்கள் நடந்தும் கூட மக்கள் அதிமுகவிற்கு 44 ஆயிரம் வாக்குகளை எடப்பாடியாரின் மீதுள்ள நம்பிக்கையின் மேல் வழங்கியுள்ளார்கள்.

ஈரோடு இடைத்தேர்தல் பொறுத்தவரை பயந்து போய் தான் திமுக வில் அத்தனை பேரும் களத்தில் இறங்கி விதிமீறல்களை செய்தார்கள். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மிக உறுதியாக எடப்பாடியார் தலைமையில் 40 தொகுதிகளையும் வெல்வோம்.

அதன் பின் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...