சிகிச்சை பெற்று வரும் கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் - நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்!

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார்.


கோவை: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் கோவை மாகர் மாவட்ட செயலாளரை முதலமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கோவைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை கட்சி நிகழ்ச்சியிலும் மாலை விசைத்தறி உரிமையாளர்கள் ஏற்பாடு செய்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வரும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக்கை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி, காந்தி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்து, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...