சிகிச்சை பெற்று வரும் கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் - நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்!

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார்.


கோவை: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் கோவை மாகர் மாவட்ட செயலாளரை முதலமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கோவைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை கட்சி நிகழ்ச்சியிலும் மாலை விசைத்தறி உரிமையாளர்கள் ஏற்பாடு செய்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வரும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக்கை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி, காந்தி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்து, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...