சிகிச்சை பெற்று வரும் கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் - நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்!

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார்.


கோவை: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் கோவை மாகர் மாவட்ட செயலாளரை முதலமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கோவைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை கட்சி நிகழ்ச்சியிலும் மாலை விசைத்தறி உரிமையாளர்கள் ஏற்பாடு செய்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வரும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக்கை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி, காந்தி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்து, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...