தாராபுரத்தில் மக்கள் நீதிமன்றம் - 16 வழக்குகள் ரூ.56.88 லட்சத்திற்கு சமரசம் செய்யப்பட்டது.

வட்ட சட்டப் பணிக்குழு சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், மோட்டார் வாகன விபத்துகள் தொடர்பான 16 வழக்குகள் விசாரணைக்கு வந்த நிலையில், ரூ.56.88 லட்சத்துக்கு சமரசம் செய்யப்பட்டு, தீர்வு காணப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 16 வழக்குகளுக்கு ரூ.56.88 லட்சத்துக்கு சமரசம் செய்யப்பட்டது.



தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது. இதில் வட்ட சட்டப் பணிக்குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி தர்மபிரபுதலைமையில், மக்கள் நீதிமன்றம் தொடங்கப்பட்டது.

வழக்கறிஞர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் மோட்டார் வாகன விபத்து தொடர்பான 16 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.56,88,000. இதில் 30 பயனாளிகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன் பெற்றனர்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப்பணியினை வட்ட சட்டப் பணிக்குழு நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...