தாராபுரத்தில் மக்கள் நீதிமன்றம் - 16 வழக்குகள் ரூ.56.88 லட்சத்திற்கு சமரசம் செய்யப்பட்டது.

வட்ட சட்டப் பணிக்குழு சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், மோட்டார் வாகன விபத்துகள் தொடர்பான 16 வழக்குகள் விசாரணைக்கு வந்த நிலையில், ரூ.56.88 லட்சத்துக்கு சமரசம் செய்யப்பட்டு, தீர்வு காணப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 16 வழக்குகளுக்கு ரூ.56.88 லட்சத்துக்கு சமரசம் செய்யப்பட்டது.



தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது. இதில் வட்ட சட்டப் பணிக்குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி தர்மபிரபுதலைமையில், மக்கள் நீதிமன்றம் தொடங்கப்பட்டது.

வழக்கறிஞர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் மோட்டார் வாகன விபத்து தொடர்பான 16 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.56,88,000. இதில் 30 பயனாளிகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன் பெற்றனர்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப்பணியினை வட்ட சட்டப் பணிக்குழு நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...