கோவையில் இருந்து வடக்கு கோவாவுக்கு புதிதாக விமான சேவை - சுற்றுலா பயணிகள் வரவேற்பு

முக்கிய சுற்றுலா தலமான வடக்கு கோவாவிற்கு கோவையில் இருந்து விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு என வாரத்தில் 4 நாட்கள் வடக்கு கோவாவிற்கு விமான சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இருந்து வடக்கு கோவாவிற்கு விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.

கோவாவில் சமீபத்தில் 2வது சர்வதேச விமான நிலையம் வடக்கு கோவாவில் திறக்கப்பட்டது. வடக்கு கோவாவில் மோபா என்ற இடத்தில் ரூ.2,870 கோடி மதிப்பீட்டில் அந்த விமான நிலையம் அமைக்கப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வடக்கு கோவாவையே சுற்றுலா தலமாக தேர்வு செய்வதால் அப்பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விமான நிலையத்திற்கு நேரடியாக செல்லும் வகையில் கோவையில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது வாரத்தில் 4 நாட்கள் என ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படுகிறது.

அதன்படி விமான சேவையானது திங்கள் கிழமைகளில் பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதன்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு சென்று சேரும்.

இதேபோல், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு சென்று சேரும். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த விமான சேவைக்கு சுற்றுலா பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...