கோவையில் இருந்து வடக்கு கோவாவுக்கு புதிதாக விமான சேவை - சுற்றுலா பயணிகள் வரவேற்பு

முக்கிய சுற்றுலா தலமான வடக்கு கோவாவிற்கு கோவையில் இருந்து விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு என வாரத்தில் 4 நாட்கள் வடக்கு கோவாவிற்கு விமான சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இருந்து வடக்கு கோவாவிற்கு விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.

கோவாவில் சமீபத்தில் 2வது சர்வதேச விமான நிலையம் வடக்கு கோவாவில் திறக்கப்பட்டது. வடக்கு கோவாவில் மோபா என்ற இடத்தில் ரூ.2,870 கோடி மதிப்பீட்டில் அந்த விமான நிலையம் அமைக்கப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வடக்கு கோவாவையே சுற்றுலா தலமாக தேர்வு செய்வதால் அப்பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விமான நிலையத்திற்கு நேரடியாக செல்லும் வகையில் கோவையில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது வாரத்தில் 4 நாட்கள் என ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படுகிறது.

அதன்படி விமான சேவையானது திங்கள் கிழமைகளில் பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதன்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு சென்று சேரும்.

இதேபோல், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு சென்று சேரும். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த விமான சேவைக்கு சுற்றுலா பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...