கோவையில் இருந்து வடக்கு கோவாவுக்கு புதிதாக விமான சேவை - சுற்றுலா பயணிகள் வரவேற்பு

முக்கிய சுற்றுலா தலமான வடக்கு கோவாவிற்கு கோவையில் இருந்து விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு என வாரத்தில் 4 நாட்கள் வடக்கு கோவாவிற்கு விமான சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இருந்து வடக்கு கோவாவிற்கு விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.

கோவாவில் சமீபத்தில் 2வது சர்வதேச விமான நிலையம் வடக்கு கோவாவில் திறக்கப்பட்டது. வடக்கு கோவாவில் மோபா என்ற இடத்தில் ரூ.2,870 கோடி மதிப்பீட்டில் அந்த விமான நிலையம் அமைக்கப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வடக்கு கோவாவையே சுற்றுலா தலமாக தேர்வு செய்வதால் அப்பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விமான நிலையத்திற்கு நேரடியாக செல்லும் வகையில் கோவையில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது வாரத்தில் 4 நாட்கள் என ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படுகிறது.

அதன்படி விமான சேவையானது திங்கள் கிழமைகளில் பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதன்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு சென்று சேரும்.

இதேபோல், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு சென்று சேரும். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த விமான சேவைக்கு சுற்றுலா பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...