தாராபுரத்தில் பி.ஏ.பி வாய்க்கால் பாசன பகிர்மானக்குழு நிர்வாகிகள் தேர்வு - போட்டியின்றி தேர்வான தலைவர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காங்கேயம், குண்டடம் பி.ஏ.பி. வாய்க்கால் பாசன பகிர்மான குழு தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தலைவராக பாலசுப்பிரமணியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், குண்டடம் ஆகிய பி.ஏ.பி. கால்வாய் பகிர்மான குழு தலைவர்களுக்கான தேர்தல் தாராபுரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்றது.

தேர்தலை ஆர்.டி.ஓ.வும், தேர்தல் அதிகாரியுமான குமரேசன் தேர்தலை நடத்தினார். அதில், காங்கேயம் பகிர்மான குழு தலைவராக பச்சாபாளையத்தை சேர்ந்த கிராம தலைவர், பாலசுப்பிரமணியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.



அதேபோல் குண்டடம் பி.ஏ.பி கால்வாய் பகிர்மான குழு தலைவராக சடையபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர்களுடன் பி.ஏ.பி கால்வாய் பகிர்மான குழு உறுப்பினர்களாக 10 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் ஆர்.டி.ஓ குமரேசன் வெற்றிபெற்றதுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.



தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு காங்கேயம், தாராபுரம் பகுதியில் உள்ள நகர, ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், வெள்ளகோவில் நகரச்செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், காங்கயம் நகர செயலாளர் வசந்தம். சேமலையப்பன், காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தம், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ், தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம், குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...