தாராபுரத்தில் பி.ஏ.பி வாய்க்கால் பாசன பகிர்மானக்குழு நிர்வாகிகள் தேர்வு - போட்டியின்றி தேர்வான தலைவர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காங்கேயம், குண்டடம் பி.ஏ.பி. வாய்க்கால் பாசன பகிர்மான குழு தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தலைவராக பாலசுப்பிரமணியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், குண்டடம் ஆகிய பி.ஏ.பி. கால்வாய் பகிர்மான குழு தலைவர்களுக்கான தேர்தல் தாராபுரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்றது.

தேர்தலை ஆர்.டி.ஓ.வும், தேர்தல் அதிகாரியுமான குமரேசன் தேர்தலை நடத்தினார். அதில், காங்கேயம் பகிர்மான குழு தலைவராக பச்சாபாளையத்தை சேர்ந்த கிராம தலைவர், பாலசுப்பிரமணியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.



அதேபோல் குண்டடம் பி.ஏ.பி கால்வாய் பகிர்மான குழு தலைவராக சடையபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர்களுடன் பி.ஏ.பி கால்வாய் பகிர்மான குழு உறுப்பினர்களாக 10 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் ஆர்.டி.ஓ குமரேசன் வெற்றிபெற்றதுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.



தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு காங்கேயம், தாராபுரம் பகுதியில் உள்ள நகர, ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், வெள்ளகோவில் நகரச்செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், காங்கயம் நகர செயலாளர் வசந்தம். சேமலையப்பன், காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தம், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ், தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம், குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...