புதிய பென்ஷன் திட்டத்திற்கு எதிர்ப்பு - தாராபுரத்தில் நூதன ஆர்ப்பாட்டம்!

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் தாராபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் கண்களில் கருப்பு துணிகளை கட்டி முழக்கங்களை எழுப்பினர்.



திருப்பூர்: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தாராபுரத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் என்ற பங்களிப்பு ஓய்வூதிய திட்ட இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் இணைந்துதாராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வாயிலின் முன்பு கண்களுக்கு கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக்கிளை இணைச் செயலாளர்ஹரிசங்கர் தலைமை தாங்கினார். அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிபால ராஜசேகர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர்ஈஸ்வரமூர்த்தி, கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமயந்தி, சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் கோட்ட நிர்வாகி பீட்டர், கால்நடைத்துறை விஜயகுமாரி, உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...