புதிய பென்ஷன் திட்டத்திற்கு எதிர்ப்பு - தாராபுரத்தில் நூதன ஆர்ப்பாட்டம்!

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் தாராபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் கண்களில் கருப்பு துணிகளை கட்டி முழக்கங்களை எழுப்பினர்.



திருப்பூர்: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தாராபுரத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் என்ற பங்களிப்பு ஓய்வூதிய திட்ட இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் இணைந்துதாராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வாயிலின் முன்பு கண்களுக்கு கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக்கிளை இணைச் செயலாளர்ஹரிசங்கர் தலைமை தாங்கினார். அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிபால ராஜசேகர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர்ஈஸ்வரமூர்த்தி, கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமயந்தி, சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் கோட்ட நிர்வாகி பீட்டர், கால்நடைத்துறை விஜயகுமாரி, உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...