தாராபுரத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பதவி உயர்வு, காலியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் இருந்து, ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து அலுவலகத்தை விட்டு வழிநடப்பு செய்து வருவாய் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் விதுர்வேந்தன் தலைமையில் நடைபெற்ற ஈரோடு மாவட்ட மையத்தின் சார்பிலான இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அரசின் அச்சாணியாக ஆணிவேராக இருந்துவரும் வருவாய்த்துறை அலுவலர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது எனவும், பறிக்கப்பட்ட வருவாய் துறை அலுவலர்களின் அதிகாரங்களை அரசு திரும்ப வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், வருவாய்த்துறை அலுவலர்களின் நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வு மீண்டும் வழங்கப்பட்டு, துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், கடந்த நான்காண்டுகளாக துணை ஆட்சியர் பட்டியல் வெளியிடப்படாமல் இருப்பதை உடனடியாக அரசு வெளியிட வேண்டும், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின்போது பாதிக்கப்பட்ட துணை வட்டாட்சியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யும் அரசாணையும், பட்டாதாரி அல்லாத வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பதவி உயர்வு ஆணையும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே, உடனடியாக பதவி உயர்வு ஆணையை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் தங்களது அலுவலகத்தை விட்டு ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வட்ட கிளை நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் முன்னணி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...