தாராபுரத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பதவி உயர்வு, காலியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் இருந்து, ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து அலுவலகத்தை விட்டு வழிநடப்பு செய்து வருவாய் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் விதுர்வேந்தன் தலைமையில் நடைபெற்ற ஈரோடு மாவட்ட மையத்தின் சார்பிலான இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அரசின் அச்சாணியாக ஆணிவேராக இருந்துவரும் வருவாய்த்துறை அலுவலர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது எனவும், பறிக்கப்பட்ட வருவாய் துறை அலுவலர்களின் அதிகாரங்களை அரசு திரும்ப வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், வருவாய்த்துறை அலுவலர்களின் நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வு மீண்டும் வழங்கப்பட்டு, துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், கடந்த நான்காண்டுகளாக துணை ஆட்சியர் பட்டியல் வெளியிடப்படாமல் இருப்பதை உடனடியாக அரசு வெளியிட வேண்டும், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின்போது பாதிக்கப்பட்ட துணை வட்டாட்சியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யும் அரசாணையும், பட்டாதாரி அல்லாத வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பதவி உயர்வு ஆணையும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே, உடனடியாக பதவி உயர்வு ஆணையை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் தங்களது அலுவலகத்தை விட்டு ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வட்ட கிளை நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் முன்னணி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...