கோவையில் கிரேன் மோதி முதியவர் பலி - பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியீடு!

கோவை சிங்கநால்லூர் - வெள்ளலூர் சாலையில் நடந்துச் சென்ற முதியவர் மருதாச்சலம் மீது அந்த வழியாக வந்த கிரேன் மோதியதில், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். முதியவர் மீது கிரேன் ஏறும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.



கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சார்ந்த முதியவர் மருதாச்சலம் (வயது70). இவர் சிங்காநல்லூர், வெள்ளலூர் போன்ற பகுதிகளில் ஆடு மேய்த்துவந்தார். இந்த நிலையில், இவர் சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அங்கு வேல்முருகன் என்ற இளைஞர் ஓட்டி வந்த கிரேன், சாலையில் திரும்பும் பொழுது அதன் முன்பக்கம் முதியவரின் மேல் இடித்தது. இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார்.



பின்னர் அந்த வாகனத்தின் டயர் முதியவர் மருத்தாசலம் மீது ஏறியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அவரது நண்பர் மணிமாறன் என்பவர் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கிரேன் ஓட்டுநர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் முதியவர் மீது கிரேன் ஏறும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. ஆதரவின்றி இருக்கும் ஆடு மேய்க்கும் முதியவர் மருதாச்சலத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், ஓட்டுநரின் கவனக்குறைவினால் இந்த விபத்து நடந்திருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...