கோவையில் கிரேன் மோதி முதியவர் பலி - பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியீடு!

கோவை சிங்கநால்லூர் - வெள்ளலூர் சாலையில் நடந்துச் சென்ற முதியவர் மருதாச்சலம் மீது அந்த வழியாக வந்த கிரேன் மோதியதில், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். முதியவர் மீது கிரேன் ஏறும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.



கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சார்ந்த முதியவர் மருதாச்சலம் (வயது70). இவர் சிங்காநல்லூர், வெள்ளலூர் போன்ற பகுதிகளில் ஆடு மேய்த்துவந்தார். இந்த நிலையில், இவர் சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அங்கு வேல்முருகன் என்ற இளைஞர் ஓட்டி வந்த கிரேன், சாலையில் திரும்பும் பொழுது அதன் முன்பக்கம் முதியவரின் மேல் இடித்தது. இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார்.



பின்னர் அந்த வாகனத்தின் டயர் முதியவர் மருத்தாசலம் மீது ஏறியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அவரது நண்பர் மணிமாறன் என்பவர் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கிரேன் ஓட்டுநர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் முதியவர் மீது கிரேன் ஏறும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. ஆதரவின்றி இருக்கும் ஆடு மேய்க்கும் முதியவர் மருதாச்சலத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், ஓட்டுநரின் கவனக்குறைவினால் இந்த விபத்து நடந்திருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...