பொள்ளாச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் - விவசாயிகள் வெளிநடப்பால் பரபரப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சார் ஆட்சியர் பிரியங்கா இல்லாமல் விவசாயிகள் குறைதீர் முறையீட்டுக் கூட்டம் நடைபெற்றது. சார் ஆட்சியர் கலந்துக் கொள்ளாமல் நடக்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.



கோவை: தமிழகத்தில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் கடந்த ஒன்றரை வருடங்களாக நடைபெறாத நிலையில், தற்சமயம் விவசாயிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா விவசாயிகளுக்கும் விவசாய சங்கங்களுக்கும் விவசாய குறைத்தீர் கூட்டம் நடைபெறுவதாக பத்திரிக்கை வாயிலாகவும், தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பியும் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், மற்றும் வேட்டைக்காரன் புதூர் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.



சார் ஆட்சியர் பணி நிமித்தமாக சென்னை சென்றுவிட்டதால் தாசில்தார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். விவசாயிகளிடம் உங்கள் குறைகளை நீங்கள் விண்ணப்பமாக கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளியிடப்பு செய்தனர்.

மேலும் சார் ஆட்சியர் பணி நிமித்தமாக சென்னை செல்கிறார் என்ற தகவலை எங்களுக்கு முன்கூட்டியே சொல்லியிருந்தால் நாங்கள் விவசாய பணியினை விட்டு விட்டு இங்கு வந்திருக்க மாட்டோம் எனவும் கூறி அரசு அதிகாரிகள் நடத்திய கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...