மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி - சிறந்த வங்கிகளுக்கு விருது வழங்கிய ஆட்சியர்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடந்த மாவட்ட அளவிலான குழுக் கூட்டத்தில், சுயஉதவி குழுக்களுக்கு அதிகளவில் கடனுதவி வழங்கிய வங்கிகளுக்கு ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பரிசுகளை வழங்கினார்.


கோவை: கோவை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யாதேவி. ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேளார் அமிர்தபால சுப்பிரமணியம், கனரா வங்கி துணை பொது மேலாளர் ஷோபித் அஸ்தனா, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலைராவ், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செல்வம், மாவட்ட மேலாளர்(தாட்கோ)/செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் சுயஉதவி குழுக்களுக்கு அதிக அளவில் கடனுதவி வழங்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு மாவட்ட அளவில் சிறந்த வங்கிக்கான முதல் பரிசும், கனரா வங்கிக்கு இரண்டாம் பரிசும், இந்தியன் வங்கிக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டன.



இதில் மாவட்ட அளவில் சிறந்த வங்கிக் கிளைகளாக இந்தியன் வங்கி மைக்ரோசேட் வங்கிக்கு முதல் பரிசும், கனரா வங்கி மைக்ரோ பினான்ஸ்க்கு இரண்டாம் பரிசும், ராம் நகர் ஐசிஐசிஐ வங்கிக்கு மூன்றாம் பரிசும், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது, இந்த ஆண்டில் 180 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் கல்வி பயில்வதற்கான கடன் உதவி வழங்கும் முகாம் வரும் 14ஆம் தேதி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இம்முகாம் குறித்து கல்லூரி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வை வங்கியாளர்கள் ஏற்படுத்த வேண்டும். இம்முகாமில் பெறப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விரைவாக கல்விக்கடன் உதவி வழங்க வங்கிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சுய உதவி குழுக்களுக்கு 1,000 கோடி கடன் இலக்கினை இம்மாத இறுதிக்குள் அடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...