பொள்ளாச்சியில் மகளிர் தினக் கொண்டாட்டம் - ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய யுவசக்தி நிதியம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மற்றும் யுவசக்தி நல சங்க அமைப்பு சார்பில் சர்வதேச மகளிர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. NIA கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கத்திடம் ஒரு கோடிக்கான காசோலையை, யுவசக்தி அமைப்பு வழங்கியது.



கோவை: என் ஐ ஏ கல்வி நிறுவனங்களின் சார்பாக சர்வதேச மகளிர் தினம் மற்றும் யுவசக்தி நல சங்க அமைப்பு விழா டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் என் ஐ ஏ நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் தலைமையுரை ஆற்றினார். அதில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தொழிற்சாலைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணிபுரிகின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறப்பாக முன்னேறி வருகின்றனர் என்றார்.



யுவசக்தி நிதியத்தின் மூலம் பெறப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதியின் காசோலை யுவசக்தி அமைப்பு மூலம் NIA கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வித்யா செந்தில்குமாருக்கு "யுவசக்தி" எனும் பெருமைக்குரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அப்போது பேசிய வித்யா செந்தில்குமார், CSR செயல்பாடுகள் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். மதுரை, செந்தமிழ் கல்லூரியில் துணை முதல்வர் முனைவர்.ரேவதி சுப்புலட்சுமி சர்வதேச மகளிர் தின விழா பேருரை நிகழ்த்தினார்.



இவ்விழாவில், NIA கல்வி நிறுவனங்களில் கல்வி மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கும் 5 மாணவிகளுக்கு விருதும், 11 மாணவிகளுக்கு ரூ.2.05 லட்சம் கல்வி உதவி தொகையும் வழங்கப்பட்டது.

யுவசக்தி மகளிர் நலச் சங்கத்தின் மூலம் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை திரட்டப்பட்ட ரூ. 85 இலட்சம் நிதியம் இவ்வாண்டு இதுவரை ரூ.1 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.



இந்நிதியம் மூலமாக பெறப்படும் தொகையினைக் கொண்டு வருடந்தோறும் பொறியியல் கல்லூரியில் 2 மாணவியர்கள், பாலிடெக்னிக் கல்லூரியில் 2 மாணவியர்கள் மற்றும் என்.ஐ.ஏ. பள்ளிகளில் 3 மாணவியர்கள் என மொத்தம் 7 தகுதி வாய்ந்த மாணவிகளைத் தத்தெடுத்து அவர்களின் கல்விச் செலவு முழுவதையும் யுவசக்தி அமைப்பே ஏற்று அவர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சியில், NIA கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன், செயலர் முனைவர் சி.ராமசாமி, யுவசக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ருக்மணி ராமசாமி, பள்ளிகளின் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் மற்றும் NIA கல்வி நிறுவனங்களின் மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...