பொள்ளாச்சியில் மகளிர் தினக் கொண்டாட்டம் - ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய யுவசக்தி நிதியம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மற்றும் யுவசக்தி நல சங்க அமைப்பு சார்பில் சர்வதேச மகளிர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. NIA கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கத்திடம் ஒரு கோடிக்கான காசோலையை, யுவசக்தி அமைப்பு வழங்கியது.



கோவை: என் ஐ ஏ கல்வி நிறுவனங்களின் சார்பாக சர்வதேச மகளிர் தினம் மற்றும் யுவசக்தி நல சங்க அமைப்பு விழா டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் என் ஐ ஏ நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் தலைமையுரை ஆற்றினார். அதில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தொழிற்சாலைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணிபுரிகின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறப்பாக முன்னேறி வருகின்றனர் என்றார்.



யுவசக்தி நிதியத்தின் மூலம் பெறப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதியின் காசோலை யுவசக்தி அமைப்பு மூலம் NIA கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வித்யா செந்தில்குமாருக்கு "யுவசக்தி" எனும் பெருமைக்குரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அப்போது பேசிய வித்யா செந்தில்குமார், CSR செயல்பாடுகள் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். மதுரை, செந்தமிழ் கல்லூரியில் துணை முதல்வர் முனைவர்.ரேவதி சுப்புலட்சுமி சர்வதேச மகளிர் தின விழா பேருரை நிகழ்த்தினார்.



இவ்விழாவில், NIA கல்வி நிறுவனங்களில் கல்வி மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கும் 5 மாணவிகளுக்கு விருதும், 11 மாணவிகளுக்கு ரூ.2.05 லட்சம் கல்வி உதவி தொகையும் வழங்கப்பட்டது.

யுவசக்தி மகளிர் நலச் சங்கத்தின் மூலம் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை திரட்டப்பட்ட ரூ. 85 இலட்சம் நிதியம் இவ்வாண்டு இதுவரை ரூ.1 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.



இந்நிதியம் மூலமாக பெறப்படும் தொகையினைக் கொண்டு வருடந்தோறும் பொறியியல் கல்லூரியில் 2 மாணவியர்கள், பாலிடெக்னிக் கல்லூரியில் 2 மாணவியர்கள் மற்றும் என்.ஐ.ஏ. பள்ளிகளில் 3 மாணவியர்கள் என மொத்தம் 7 தகுதி வாய்ந்த மாணவிகளைத் தத்தெடுத்து அவர்களின் கல்விச் செலவு முழுவதையும் யுவசக்தி அமைப்பே ஏற்று அவர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சியில், NIA கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன், செயலர் முனைவர் சி.ராமசாமி, யுவசக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ருக்மணி ராமசாமி, பள்ளிகளின் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் மற்றும் NIA கல்வி நிறுவனங்களின் மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...