உடுமலையில் கோயில் திருவிழா - கடவுள்களின் வேடமணிந்து ஆடிப்பாடிய பக்தர்கள்!

உடுமலை அருகே காட்டூரில் உள்ள ஸ்ரீ புது மாரியம்மன் கோயிலில் நடந்த திருவிழாவில், ஆண்கள் கடவுள் வேடம் அணிந்தும், பெண்கள் வேடம் அணிந்தும் குழந்தைகள் முருகன் விநாயகர் வேடம் அணிந்தும் வீதிகளில் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்துள்ள கிழவன் காட்டூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ புது மாரியம்மன் திருக்கோவில் திருவிழா கடந்த நான்காம் தேதி முதல் கம்பம் போடுதல் திருமூர்த்திமலை சென்று தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் பூவோடு எடுத்தல் திருகல்யாண நிகழ்ச்சி என மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் முக்கிய நிகழ்வாக, ஆண்கள் கடவுள் வேடம் அணிந்தும், பெண்கள் வேடம் அணிந்தும் குழந்தைகள் முருகன் விநாயகர் வேடம் அணிந்தும் பக்தி பாடல்களுக்கு ஆட்டம் பாட்டத்துடன் ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனை சுற்றுவட்டார கிராம மக்கள் திரளான கண்டு களித்தனர்.



இது குறித்து மாறுவேடம் அணிந்த பக்தர் கூறுகையில், வருடந்தோறும் கோவில் திருவிழாவில் முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி நோய்நொடியின்றி கிராம மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...