கோவை- அவிநாசி சாலையில் சுரங்க பாதை மூடல்

கோவை-அவிநாசி சாலையில் உள்ள பாதாள சுரங்க பாதை பயன்பாட்டில் இல்லாததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதையடுத்து அந்த பாதையை மாநகராட்சி அதிகாரிகள் மூடினர்.


கோவை: அவிநாசி சாலையில் உள்ள பாதாள சுரங்க பாதை பயன்பாட்டில் இல்லாததால் மாநகராட்சி அதிகாரிகள் மூடினர்.

கோவை-அவினாசி சாலையில் மேம்பாலத்தின் கீழ் பொதுமக்கள் ரவுண்டானா பகுதியிலிருந்து புரூக்பாண்ட் சாலைக்குச் செல்ல தனி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதையை, பொதுமக்கள் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாமல் விட்டதால், காலப்போக்கில், சமூக விரோதிகள் இந்த சுரங்கப்பாதையைத் திறந்தவெளி கழிப்பிடமாகவும், மது அருந்துவதற்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.



இந்த பாதையை அடைக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் பூங்கா அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த பாதையை அடைத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மேம்பாலம் சுரங்கப்பாதையின் ரவுண்டானா பகுதியில் பொதுமக்கள் கடக்கத் தனிப் பாதை அமைக்கப்பட்டது. ஆனால் பின்னர் பொதுமக்கள் பயன்பாடு குறைவாக இருந்ததால் மூடப்பட்டது. இந்த பாதையில் அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...