கோவை- அவிநாசி சாலையில் சுரங்க பாதை மூடல்

கோவை-அவிநாசி சாலையில் உள்ள பாதாள சுரங்க பாதை பயன்பாட்டில் இல்லாததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதையடுத்து அந்த பாதையை மாநகராட்சி அதிகாரிகள் மூடினர்.


கோவை: அவிநாசி சாலையில் உள்ள பாதாள சுரங்க பாதை பயன்பாட்டில் இல்லாததால் மாநகராட்சி அதிகாரிகள் மூடினர்.

கோவை-அவினாசி சாலையில் மேம்பாலத்தின் கீழ் பொதுமக்கள் ரவுண்டானா பகுதியிலிருந்து புரூக்பாண்ட் சாலைக்குச் செல்ல தனி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதையை, பொதுமக்கள் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாமல் விட்டதால், காலப்போக்கில், சமூக விரோதிகள் இந்த சுரங்கப்பாதையைத் திறந்தவெளி கழிப்பிடமாகவும், மது அருந்துவதற்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.



இந்த பாதையை அடைக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் பூங்கா அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த பாதையை அடைத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மேம்பாலம் சுரங்கப்பாதையின் ரவுண்டானா பகுதியில் பொதுமக்கள் கடக்கத் தனிப் பாதை அமைக்கப்பட்டது. ஆனால் பின்னர் பொதுமக்கள் பயன்பாடு குறைவாக இருந்ததால் மூடப்பட்டது. இந்த பாதையில் அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...